tag:blogger.com,1999:blog-91248616138189879342024-03-19T00:59:09.512-07:00புதுச்சேரி சித்தர்கள் ஜீவசமாதி 7thsenshttp://www.blogger.com/profile/15929479294078616300noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-9124861613818987934.post-44407156289829281062016-07-17T07:56:00.002-07:002016-07-17T07:56:24.156-07:00கம்பளி ஞான தேசிகர்,<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கம்பளி ஞான தேசிகர்,<br />
<br />
கம்பளி ஞான தேசிகர், சென்னயிலிருந்து புதுவைக்கு வந்ததாக<br />
சொல்லப்படுகிறது.இவருடைய உண்மை பெயர், பெற்றோர்<br />
விவரங்கள் யாருக்கும் தெரியவில்லை.<br />
<br />
இவர் கம்பளி போர்வை அணிந்திருந்ததால் மக்கள் இவரை<br />
கம்பளி சாமியார் என்று அழைத்தனர்.<br />
<br />
இவர் புதுவையிலுள்ள பாக்குமுடையான்பட்டு, முத்தியால்பேட்டை<br />
கவுண்டன்பாளையம் போன்ற பகுதிகளில் உலவி வருவார்.<br />
<br />
கவுண்டன்பாளயத்தில், சாஹையார் என்ற பெயர் கொண்ட<br />
குடும்பத்தினரிடம் மட்டும் தொடர்பு கொண்டிருந்தார்.<br />
<br />
ஒரு இஸ்லாமிய பெரியவர், இவருக்கு குருவாக இருந்தார்<br />
என்று சொல்லப்படுகிறது.வேலாயுதம் என்ற வைத்தியர்<br />
இவரிடம் நெருங்கிப் பழகியதாகவும் சொல்லப்படுகிறது.<br />
<br />
இச்தேசிகர் நிறைய கல்வி அறிவு பெற்றவர்.சுத்த<br />
பிரம்மச்சாரி.மாயையை வென்றவர்.<br />
<br />
சுவாமிகள்,தன் ஆன்மீகச் சக்தியால் ஊர் மக்களுக்கு<br />
நிறைய நன்மைகள் செய்துள்ளார். பக்தர்களுக்கு கொடிய<br />
நோய் வந்துவிட்டால் அவர்களுக்கு பச்சிலையும்<br />
விபூதியும் தந்து குணமாக்குவார்.<br />
<br />
ஒம்ஸ்ரீ கம்பளி தேசிக சுவாமிகள் நினைத்த இடத்தில்<br />
மறைந்து, நினைத்த இடத்தில் தோன்றும் சக்தி படைத்தவர்.<br />
சூட்சுமத்தில் மறைந்திருக்கும் ஒன்றை ஸ்தூலத்திற்கு<br />
அழைத்து வரும் ஆற்றல் படைத்தவர்.<br />
<br />
சில சமயம் சாலையில் நின்று கொள்வார்.வாயில்<br />
ஒரு சுருட்டை வைத்துக் கொண்டு போவோர்,வருவோரிடம்<br />
நெருப்பு கேட்பார். அவர்கள் தராவிட்டால் தன் ஆட்காட்டி<br />
விரலை சுருட்டுக்கு முன்னால்-பத்த வைப்பது போல்<br />
நீட்டுவார். சுருட்டு குப்பென்று பற்றிக் கொள்ளும்.<br />
<br />
சுவாமிகள் ஒரு முறை கள்ளுக் கடைக்கு சென்றார்.<br />
கையை நீட்டினார். கடைக்காரர்,” இன்னும் போணியாகவில்லை-போ”<br />
என்றார்.சுவாமிகள் நெடுந்தூரம் சென்று ஒரு ஆலமரத்தடியில்<br />
உட்கார்ந்து விட்டார். அன்று பூராவும் வியாபாரம் ஆகவேஇல்லை.<br />
கள்ளுக்கடைக்காரர், சுவாமிகளை தேடி ஓடினார். வெகு சிரமத்திற்கு<br />
பின் சுவாமிகளை கண்டு பிடித்து கடைக்கு கூப்பிட்டார்.<br />
சுவாமிகள்,”நான் வருகிறேன் - நீ முன்னால் போ” என்று சொல்லி<br />
அவரை அனுப்பினார். கடைக்காரர், ஒரு குதிரை வண்டியில்<br />
வேகமாக கடைக்கு வந்து சேர்ந்தார். சுவாமிகள், அதற்கு முன்னரே<br />
வந்து அங்கு உட்கார்ந்திருந்தார்.<br />
<br />
மற்றுமொரு நாள் ஒரு சாராயக்கடைகாரனிடம் கையை<br />
நீட்டினார். அவனும் இன்னும் போணியாகவில்லை என்று<br />
சொன்னான்.சுவாமிகள் போய் விட்டார். அன்று முழுதும்<br />
எவ்வளவு முயன்றும் சாராய புட்டியின் மூடிகளை திறக்க<br />
முடியவில்லை.<br />
<br />
பாக்குமுடையான்பட்டில் ஒரு வீட்டில், சுவாமிகள் ஊறுகாய்<br />
கேட்டார். வீட்டுக்காரர்,” இல்லை போ” என்று துரத்தினார்.<br />
சிறிது நேரங்கழித்து வீட்டுக்காரர் ஊறுகாயை திறந்து<br />
பார்க்கும் பொழுது-ஊறுகாயில் புழு பூழ்த்திருந்தது.<br />
உடனே அவர் சுவாமிகளை தேடிச் சென்று மன்னிப்பு<br />
கேட்டார். பின், மறுபடி புழுக்கள் ஊறுகாயானது.<br />
<br />
ஒரு சமயம், சுவாமிகளும் மற்றும் சிலரும் அடர்ந்த<br />
கள்ளிக்காடு வழியே சென்று கொண்டிருந்தார்கள்.<br />
ஒரு விரியன் பாம்பு சுவாமிகளை கடித்து விட்டது.<br />
அடுத்த நாள் சுவாமிகள் இறந்திருப்பார், என்று உடன்<br />
வந்தவர்கள் நினைக்க,காட்டில்- அந்த இடத்தில் பாம்பு இறந்து<br />
கிடந்தது.<br />
<br />
சுவாமிகள், தன் ஆத்ம சாதனைகளை பெரும்பாலும் தரையில்<br />
செய்வதில்லை.தண்ணீரில் தான் செய்து வந்தார். நீரின் மேலேயே<br />
படுத்துக் கிடப்பார். ஜலஸ்தம்பனம் செய்வது இவரது பழக்கம்.<br />
<br />
சுவாமிகள், ஏதோ ஒரு காரணத்தால் ஜலத்தில் ஸ்தம்பனம்<br />
செய்து கொண்டார். சில நாட்களில் ஜல சமாதியடைந்தார்.<br />
குளத்திலேயே அவர் உடல் கிடந்தது. அவ்வழியே சென்றவர்<br />
இதை கவனிக்கவில்லை.<br />
மறுநாள் காலை ஒரு குரல் கேட்டது “கம்பளி தண்ணியிலே-<br />
கம்பளி தண்ணியிலே “. இக்குரல் தொடர்ந்து கேட்டவண்ணமாக<br />
இருந்தது.<br />
<br />
மக்கள் ஒன்று கூடி அவர்தம் திருவுடலை, நீரிலிருந்து<br />
வெளிகொணர்ந்து-அங்கேயே சமாதி செய்தனர்.<br />
சமாதியின் மேல் ஒரு லிங்கமும் பிரதிஷ்டை செய்துள்ளனர்.<br />
<br />
சமாதியை சுற்றிலும் சுவாமியின் அனுக்கிரகம் பெற்றவர்கள்<br />
ஏழு பேர் சமாதியடைந்துள்ளனர்.<br />
<br />
ஒரு சமயம் குப்பம்மாள் என்ற மாது மகோதர நோயால்<br />
துன்பப்பட்டாள்.சுவாமியின் சன்னதியில் விழுந்து அழுதாள்.<br />
எந்த மருந்துமில்லாமல் அந்த நோய் அவளை விட்டு அகன்றது.<br />
<br />
கம்பளி தேசிக சுவாமிகளின் சமாதியின் பின்புறம்-பெரியவர்க்கு<br />
பெரியவர் என்னும் மகானின் சமாதியும் உள்ளது.<br />
<br />
சுவாமிகள் 1874 -ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி தட்டாஞ்சாவடி<br />
அருகில் உள்ள ருத்திர பூமிக்குச் சமீபத்தில் சமாதியடைந்தார் </div>
7thsenshttp://www.blogger.com/profile/15929479294078616300noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9124861613818987934.post-45916942725391255942016-03-05T04:37:00.001-08:002016-03-05T04:37:48.512-08:00ஸ்ரீல ஸ்ரீ பூண்டிமகான் ஆற்று சுவாமிகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அரக்கோணத்தில் வாழ்ந்துவந்தார் பூண்டி சுவாமிகளின் அடியவர் ஒருவர். அளவற்ற பொருளாதாரக் கஷ்டத்தில் சிக்கிக்கொண்டுவிட்டார். திடீரென ஒரு விபரீதமான முடிவுக்கு வந்துசேர்ந்தார். இரவு பத்துமணி இருக்கும். அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு வந்தார். ரயிலிலில் தலையைக் கொடுத்து உயிரை மாய்த்துக் கொள்ள எண்ணித் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்தார். பூண்டி சுவாமிகளையே தியானம் செய்தவாறு அமைதி காத்தார். ஒரு ரயில் மிக வேகமாக அவர் தலைவைத்துப் படுத்திருந்த இடம் நோக்கி ஓடிவந்தது…<br />
அடுத்த கணம் அவர் அருகில் தோன்றியது பூண்டி மகானின் ஒளிவீசும் பொன்னுருவம். அவரை அப்படியே இரு கைகளில் அள்ளி எடுத்துக்கொண்டு அருகே உள்ள மணல் திட்டில் கிடத்தினார் சுவாமிகள். கூவென்று கூவிய ரயில், பூண்டி சுவாமிகளின் மகிமையைத் தான் தன் மொழியில் கூவியதோ என்னவோ? ரயில், தண்டவாளத்தில் விரைந்து சென்று மறைந்தது.<br />
அன்பருக்குத் தன் கண்களையே நம்பமுடிய வில்லை. ஒரு கணத்தில் என்ன நடந்தது இங்கே?<br />
பூண்டி சுவாமிகள் அவரையே கனிவோடு பார்த்துக் கொண்டிருந்தார். பின் மெல்லச் சொல்லலானார்:<br />
“”அன்பனே! கஷ்ட நஷ்டங்கள் மாறிமாறி வருவதுதானே வாழ்க்கை? வெகுவிரைவில் உனக்கு நல்ல காலம் வரவிருக்கிறது. இப்போது உன் உயிரை நீ போக்கிக்கொண்டால் அந்த நல்ல காலத்தை நீ எப்படி அனுபவிக்க இயலும்? இறைவன் தந்த உயிரை எடுக்க இறைவனுக்கு மட்டுமே உரிமையுண்டு. உனக்கு அந்த உரிமை கிடையாது மகனே! வீடு நோக்கிப் போ. நல்ல சேதி காத்திருக்கிறது!”பரிவோடும் கருணையோடும் அறிவுறுத்திய பூண்டி மகானின் உருவம் மெல்ல மெல்ல காற்றில் கலந்து மறைந்தது.<br />
அன்பர் திகைப்போடும் பரவசத்தோடும் நடந்து வீடு வந்துசேர்ந்தார். வாசலிலிலேயே யாரோ ஒருவன் அவரை எதிர்பார்த்து அமர்ந்திருந்தான். அன்பர் அவனிடம் யார் அவன் என விசாரித்தார்.<br />
சென்னையிலிலிருந்து வந்திருந்தான் அவன்.<br />
அன்பருக்கு அறிமுகமான ஓர் ஆங்கிலோ இந்தியர்தான் அவனை அனுப்பி வைத்திருந்தார். சென்னையில் நல்ல சம்பளத்தில் ஒரு புதுவேலை அவருக்காகக் காத்துக்கொண்டிருப்பதைச் சொல்லிலிற்று அவன் கொண்டுவந்திருந்த கடிதம்!<br />
மறுநாளே பூண்டிக்குப் போய் சுவாமிகளை தரிசித்தார் அன்பர். பக்தியில் நெகிழ்ந்த அவரைப் பார்த்துப் பூண்டி சுவாமிகள் குறும்பாகச் சிரித்தார்.<br />
“”உன் வாழ்க்கை ரயில் இன்னும் ஓட வேண்டியிருக்கிறதே அப்பா!<br />
அதற்குள் என்ன அவசரம்? பட்டினப் பிரவேசம் நிகழ்ந்தபிறகு எல்லாம் சரியாகும்!” சுற்றியிருந்தவர்களுக்கு சுவாமிகள் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஏதோ பேசுவதாகத் தோன்றியது. ஆனால் குறிப்பிட்ட அன்பர் கண்களில் மட்டும் அவர் அருளை உணர்ந்து அருவிபோல் கண்ணீர் வழிந்தது…<br />
<br />
அஷ்டமா சித்திகளைப் பெற்ற சித்தர்கள்<br />
ஒரே நேரத்தில் பல இடங்களில் தோன்றும் ஆற்றல் பெற்றவர்கள். (நெரூர் சுவாமிகளான சதாசிவப் பிரம்மேந்திரர் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் தோன்றி இரண்டு இடங்களில் சித்தி அடைந்ததாகச் சொல்லப்படுகிறது.)<br />
பூண்டி சுவாமிகள் தாம் இத்தகைய சித்துகளைச் செய்ததாக நேரடியாக ஒப்புக் கொண்டதில்லை. அன்பர்கள் விசாரித்தாலும் மர்மமான பதில்கள்தான் வரும்.<br />
<div>
<br /></div>
</div>
7thsenshttp://www.blogger.com/profile/15929479294078616300noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9124861613818987934.post-85215278897473554092016-03-05T01:40:00.000-08:002016-03-05T01:57:41.290-08:00ஸ்ரீ கந்தசாமி தேசிகர் நெட்டப்பாக்கம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<b><span style="color: yellow; font-size: large;"><a href="http://jeevasamaathi.blogspot.in/2016/03/blog-post_28.html">ஸ்ரீ கந்தசாமி தேசிகர்</a></span></b></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNSAiplhp90I7VYbgd68oztHAKwpFLkHQ11utYI3GFIvIf6IHy0hUvMVjBDm_CC2I4hRc-Xk0MbIL1gKerzBX-c1pC15JNH-a9DgyylUrnEjVhwkXyp9zSbfuAZEOaq-EvD1nGZhnd2cME/s1600/ssdde.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNSAiplhp90I7VYbgd68oztHAKwpFLkHQ11utYI3GFIvIf6IHy0hUvMVjBDm_CC2I4hRc-Xk0MbIL1gKerzBX-c1pC15JNH-a9DgyylUrnEjVhwkXyp9zSbfuAZEOaq-EvD1nGZhnd2cME/s320/ssdde.jpg" width="320" /></a></div>
<br />
புதுவை, நெட்டப்பாக்கம் என்ற ஊரில் சற்குரு ஸ்ரீ கந்தசாமி தேசிகர் சமாதி கொண்டுள்ளார்.<br />
நெட்டப்பாக்கத்தில் பெரிய கோயில் என்றழைக்கப்படும் ராமலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு போகும் வழியில்-அரசாங்க பள்ளி அருகில் அமைந்துள்ளது இவருடைய ஜீவசமாதி.<br />
சுமார் 300 வருடங்களுக்கு முன்னர் கந்தசாமி தேசிகர் என்ற இச்சித்தர் இப்பகுதியில் இறைவனைப் பற்றிய ஆனந்தத்திலேயே வாழ்ந்து வந்தார். அப்பகுதி மக்களின் இன்னல்களை நீக்கி இன்னருள் புரிந்து வந்தார்.<br />
சுவாமிகள் மறைந்தவுடன் அவருடைய சமாதியின் மேல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து ஊர்மக்கள் வழிபட்டு வந்ததாக பெரியோர்கள் கூறுவர்.<br />
பெருமை வாய்ந்த அவருடைய சமாதி பீடம்-ஆங்கிலேயர் காலத்திற்குப் பின் சிதிலமடைந்து விட்டது. இதனை கண்ணுற்ற அவ்வூர் சிவனடியார்கள் –பெரிதும் முயற்சி செய்து ஊர்மக்களின் உதவியுடன் அத்திருக்கோயிலை மறுபடி சீர் செய்யும் அரிய பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். அத்துடன் வியாழன் தோறும் தேவார- திருவாசக பதிகங்கள் பாராயணம் செய்து மிகச் சிறப்பாக வழிபாடு செய்து வருகின்றனர்.<br />
<br />
இதில் பெருமைக்குரிய-மிகவும் போற்றுதற்குரிய செய்தி அச்சிவனடியார்கள் அனைவரும் மிகவும் இள வயதினர்.<br />
<br />
<br />
<br />
வாழ்க அவர்கள் திருத்தொண்டு-<br />
சிறக்க அவர்கள் பணி.<br />
<div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCm50UKrb7imTPY2CYHtPMBprI4noP_Bt0UdgOHgvYxOhzMuMgygV9LNPEGiHWsOghFz5RPtK1DCBJu_dCxLX9B2RkTXl8GGfdvOTTd-EJkw17Jd5yGi634R6uW10rH31kU0LHS1BZEUGF/s1600/Photo0061.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCm50UKrb7imTPY2CYHtPMBprI4noP_Bt0UdgOHgvYxOhzMuMgygV9LNPEGiHWsOghFz5RPtK1DCBJu_dCxLX9B2RkTXl8GGfdvOTTd-EJkw17Jd5yGi634R6uW10rH31kU0LHS1BZEUGF/s320/Photo0061.jpg" width="320" /></a></div>
<br /></div>
</div>
7thsenshttp://www.blogger.com/profile/15929479294078616300noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9124861613818987934.post-14688967991523938242016-03-05T01:05:00.004-08:002016-03-05T01:07:34.577-08:00ஜீவசமாதி அடைய நிலம் வாங்கி காத்திருக்கும் சித்த வித்தியார்த்திகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="color: yellow;">தனக்காக கட்டியுள்ள ஜீவசமாதி முன் நிற்கும் பாண்டியன் </span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLqxK7pDIfETu5W4kZiUskg3_1PzeXbL2d18XXs-hPaNBvxYIwyMEdG2o-xTBwWYigo7xf4mNZcJwKhH3lq6zoL9Z1rvESs_j2kVieZHr2qZvkFZRnnO7RCvYYaS230H7PSt3az6BvxBs1/s1600/Untitled_2358811f.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="285" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLqxK7pDIfETu5W4kZiUskg3_1PzeXbL2d18XXs-hPaNBvxYIwyMEdG2o-xTBwWYigo7xf4mNZcJwKhH3lq6zoL9Z1rvESs_j2kVieZHr2qZvkFZRnnO7RCvYYaS230H7PSt3az6BvxBs1/s400/Untitled_2358811f.jpg" width="400" /></a></div>
சிவகங்கை மாவட்டம் சிங்கம் புணரி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த 50 பேர் ஜீவசமாதி அடைவதற்காக நிலம் வாங்கி பதிவு செய்து வைத்துள்ளனர்.<br />
<br />
சித்தர்கள் பூமியான சிங்கம் புணரியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் புலவர் பாண்டியன். மத்திய - மாநில அரசுகளின் நல்லாசிரியர் விருதுகளை பெற்ற இவர், ஜீவசமாதிக்காக பத்து சென்ட் நிலம் வாங்கி அதில் சமாதி கட்டி மூடி வைத்திருக்கிறார்.<br />
<br />
“சராசரி மனிதனும் சித்தர் ஆவதற்கான திறவுகோல்தான் சித்த வித்தை. இதை சாமானியனுக் கும் போதித்தார் சித்த சமாஜ ஸ்தாபகரான சுவாமி சிவானந்த பரமஹம்சர். அவரது உதவியாள ரான நாராயண நம்பியாரிடம் நானும் என் மனைவியும் சித்த வித்தை போதனை பெற்றோம்.<br />
<br />
சித்த வித்தை என்பது புற வித்தை அல்ல; அது அகவித்தை. அது ஆன்மாவை இறைவனோடு இணைக்கின்ற முயற்சி. நமக்குள்ளே ஜீவன் இருக் கிறது. அது ஆற்றலாகி கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் போய்க் கொண்டு இருக்கிறது. ஆற்றல் தீர்ந்துவிட்டால் நமது உடம்பில் சத்துப் போய்விடுகிறது. அதைத் தான் ’செத்துப் போய் விட்டது’ என்கிறார்கள்.<br />
<br />
அப்படி நமக்குள் இருக்கும் ஜீவ சக்தியை வெளியில் போக விடாமல் தடுத்து நிறுத்தி, உள்ளில் கூடி நம்முடைய கபாலத்தில் அன் னாக்கிற்கு மேல் உள்ள இரு துவாரங்களின் வழியாக மேலும் கீழும் ஏற்றி இறக்கி உச்சியில் இருக்கின்ற பிரம்ம ரந்திரத்தை தட்டித் திறந்து அதனுள் ஜீவனை லயித்து இருக்கும்படி செய்வது தான் ஜீவ சமாதி. அந்த நிலையில் ஐம்புலங்களின் செயல்பாடுகள் அடங்கி இருக்கும். வெளி உலக பாதிப்புகள் நம் உடலை பாதிக்காது” என்கிறார் பாண்டியன்.<br />
<br />
“நாம் தினமும் 21,600 தடவை மூச்சு விடுகிறோம். உச்சியிலிருந்து நாசி வரை 12 அங்குல தூர மூச்சுக் காற்றானது திரும்பிப் போகும் போது எட்டு அங்குலம்தான் போகிறது; மீதி 4 அங்குலம் வீணாகி விடுகிறது.<br />
<br />
வெளியில் விடும் இந்த 12 அங்குலத்தை படிப்படியாக குறைக்க குறைக்க நமக்கு அபூர்வ சக்தி பெருகும். இறுதியாக, மூச்சுக் காற்றை தொடங் கும் நிலையிலேயே நிறுத்தும்போது உடம்பில் சலனமே இல்லாமல் போய்விடும். அதுதான் மரண மில்லா பெருவாழ்வு நிலை. ஜீவ சமாதிக்கான பயிற்சியில் இருப்பவர்களுக்கு இந்த நிலை எந்த நேரத்திலும் வரலாம்’’ என்கிறார்கள் சித்த வித்தி யார்த்திகள்.<br />
<br />
பாண்டியனைப் போலவே சிங்கம்புணரி, மேலூர், திருப்பத் தூர் பகுதிகளில் 50 பேர் வரை உள்ளனர். இவர்கள் ஜீவசமாதி அடைவதற்காக சிங்கம்புணரியில் பொது மயானம் அருகே பத்து சென்ட் நிலம் வாங்கி ‘சித்த வித்தியார்த்திகள் அடக்க ஸ்தலம்’ என்ற பெயரில் பத்திரப் பதிவும் செய்து வைத்துள்ளனர். இதில் ஏற்கெனவே 3 பேர் ஜீவசமாதி அடைந்துள்ளனர்.<br />
<br />
“அடக்கம் அமரருள் உய்க்கும்..” இந்தக் குறளுக்கு வள்ளுவன் தரும் விளக்கம் வேறு, ஆனால், ‘‘உயிருடன் இருக்கும்போதே ஜீவ சமாதியானால் தெய்வமாகலாம்’ என்பதைத்தான் வள்ளுவம் அப்படிச் சொல்லி இருக்கிறது’’ என்கிறார் பாண்டியன்.</div>
7thsenshttp://www.blogger.com/profile/15929479294078616300noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9124861613818987934.post-32814630722390110142016-03-05T00:54:00.002-08:002016-03-05T00:55:09.702-08:00சித்தர் ஜீவ சமாதியும் பிரச்சனை தீர வழிபிறப்பும் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
யாரும் நேரடியாக பார்க்க முடியாது. அதனால். நமது கோரிக்கைகளை கடவுளை அடைய ஒரு கருவியாக இருப்பவர்கள்தான் சித்தர்கள். இன்னும் சொல்லப் போனால், கடவுளிடம் கேட்பதை, சித்தர்களே முன்வந்து நமக்கு அளிப்பார்கள் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.  சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்று பொருள். சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி, தெய்வீக செயல்களையும், நினைத்த காரியங்களையும் செய்வர்கள்தான் சித்தர்கள். இதையே சித்து விளையாட்டு என்று அழைக்கின்றனர்.<br />
<br />
அதனால்தான், இதுவரை கோவில்கோவிலாக சென்றவர்கள்கூட, சித்தர்கள் ஜீவசமாதி உள்ள கோவில்களை கேட்டு அறிந்து, தேடிச்சென்று சுவாமி தரிசனம் செய்து வான் புகழும், அளவில்லா செல்வமும், நல்ல ஆரோக்கியமும், மனதில் மகிழ்ச்சியுடனும் வாழ்கின்றனர்.<br />
<br />
உதாரணத்திற்கு, தமிழக மக்கள் மட்டுமின்றி கேரளா மக்களும் பழனிமலை முருகனை மனம் உருக வழிபட காரணம் அங்கு போகர் சித்தர் ஜீவசமாதி உள்ளதே.<br />
<br />
அதே போன்று, இந்தியாவில் உள்ள பெரும்பெரும் பணக்காரர்கள் எல்லாம், திருப்பதி மலை நோக்கி சென்று வருவதற்கு அங்கு, கொங்கணவர் என்ற சித்தர் ஜீவசமாதி உள்ளதே.<br />
<br />
இப்படி பெருமைமிகு சித்தர்களில் 18 பேர்தான் தலையாய சித்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அருளும், அன்பும், சிவமும், அளவற்ற சக்தியையும் ஒருங்கே பெற்றுள்ள அந்த 18 சித்தர்கள் ஜீவசமாதி உள்ள பெருமைமிகு கோவில்கள் இதோ:-<br />
<br />
<div style="text-align: center;">
<b><span style="color: yellow;">அகஸ்தியர் – திருவனந்தபுரம்</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="color: yellow;">கொங்கணர் – திருப்பதி</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="color: yellow;">சுந்தரனார் – மதுரை</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="color: yellow;">கரூவூரார் – கரூர்</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="color: yellow;">திருமூலர் – சிதம்பரம்</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="color: yellow;">தன்வந்திரி – வைதீஸ்வரன்கோவில்</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="color: yellow;">கோரக்கர் – பொய்யூர்</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="color: yellow;">குதம்பை சித்தர் – மாயவரம்</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="color: yellow;">இடைக்காடர் – திருவண்ணாமலை</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="color: yellow;">இராமதேவர் – அழகர்மலை</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="color: yellow;">கமலமுனி – திருவாரூர்</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="color: yellow;">சட்டமுனி – திருவரங்கம்</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="color: yellow;">வான்மீகர் – எட்டிக்குடி</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="color: yellow;">நந்திதேவர் – காசி</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="color: yellow;">பாம்பாட்டி சித்தர் – சங்கரன்கோவில்</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="color: yellow;">போகர் – பழனி</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="color: yellow;">மச்சமுனி – திருப்பரங்குன்றம்</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="color: yellow;">பதஞ்சலி – இராமேஸ்வரம்</span></b></div>
<div style="text-align: center;">
<br /></div>
மனிதர்கள் யாவரும் ஏதாவது ஒரு திதியில் நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள். இதை அவரவர் ஜாதகத்தில் அறியலாம். பலருக்கும் தன் பாவ வினையால் எவ்வளவு முயற்சித்தும் தெய்வ அருளை பெறமுடியாமல் இருப்பார்கள். அவர்கள் அவர்கள் தன் திதியிலோ அல்லது நட்சத்திரத்திலோ அல்லது நட்சத்திரத்திலோ பிறந்த சித்தர்களைக் கண்டு வணங்கினால் பிரச்சனை தீர வழிபிறக்கும். ஒரு முறையாவது உங்கள் சித்தர் ஜீவ சமாதி நேரில் சென்று ஜென்ம நட்சத்திரத்திலோ, திதியிலோ சென்று தரிசித்துவிட்டு பின்பு வீட்டிலேயே மறுமுறையில் அந்த குறிப்பிட்ட நாளில் மாதாமாதம் உபவாசம் இருந்து வணங்கிவந்தால் பல மாறுதலான வாழ்வு தங்களுக்கு அமையும்.<br />
<br />
வெகு தொலைவில் சில ஜீவ சமாதிகள் அமைந்துள்ளதால் அங்கு சென்றுவர இயலாதவர்கள் வீட்டிலேயே ஒரு வெள்ளை விரிப்பின்மீது அமர்ந்து உங்கள் சித்தரின் பெயரை உச்சரித்து முடிந்தால் அவரின் மந்திரங்களைக்கூறி தியானம் செய்யுங்கள். நல்லதே நடக்கும்.<br />
<br />
மேலும் அறிக : திதியில் பிறந்தவர்களே அனைவரும் எனவே திதி இல்லாமல் விதி அமையாது. உங்கள் நட்சத்திர நாளை பார்த்து பூஜிக்க முடியாவிட்டாலும் உங்கள் திதி நாளில் பூஜிக்கலாம். அதுவும் முடியாவிட்டால் அமாவாசை பௌர்ணமி திதிகளில் வழிபாடு செய்யலாம். சில சித்தர்களின் ஜீவ சமாதி எங்குள்ளது என்று தெரியாமலேயே இருக்கிறது. சிலர் அங்குள்ளது இங்குள்ளது எனவும் தன் ஊரை வளர வைக்க எத்தனித்து இங்குதான் சமாதி உள்ளது. ஓலைச்சுவடி ஆதாரம் உள்ளது என ஒரு கதையையும் உருவாக்கிய சம்பவம் நிறைய உள்ளது. எது எப்படியோ நம்பிக்கையே தெய்வம். அந்த நம்பிக்கையோடு இருக்கும் இடத்தை நாடிச்சென்று வழிபாடு செய்யுங்கள்.<br />
<br />
சித்தர்கள் எந்த திதியில் பிறந்தார்கள் என்பதை வரலாறு சரியாக அனைவருக்கும் குறிப்பிடவில்லை. ஆனால் நட்சத்திரங்களையும் பிறந்த தமிழ் மாதங்களையும் குறிப்பிட்டுள்ளார்கள். கீழே எந்தெந்த நட்சத்திரத்தில் சித்தர்கள் பிறந்தார்கள் அவர்கள் ஜீவ சமாதி எங்குள்ளது. அவர்களுக்கான மந்திரம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது பயன்படுத்தி வளம் காணுங்கள்.<br />
<br />
அசுவினி நட்சத்திர சித்தர் பெயர் காளங்கிநாதர் ஆவார். இவர் சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய தலங்களில் உள்ளது. அவரவருக்குபெயரே மந்திரம். எனவே சித்தர்களின் பெயரை மரியாதையாக உச்சரித்தலே போதும். ஓம் குருவே சரணம் என மூன்றுமுறை கூறி ஓம் ஸ்ரீ காளங்கி நாதர் சித்த குருசுவாமியே சரணம் சரணம் என முடிந்தளவு மனம் விரும்பும் வரை கூறலாம். மற்ற நட்சத்திரக்காரருக்கும் இதே முறையில் தான் மந்திரம் கூற வேண்டும். காளங்கிநாதர் என்ற பெயரை நீக்கி உங்கள் சித்தர் பெயரை சேர்த்துக்கொள்ளவும்.அடுத்து<br />
<br />
பரணி நட்சத்திரம் சித்தர் போகர் ஆவார். இவர் பழனி முருகன் சன்னதியில் சமாதி உள்ளது. அடுத்து<br />
<br />
கிருத்திகை நட்சத்திரம் ரோமரிஷி சித்தர்ஆவார். இவருக்கு சமாதியும் இல்லை. இவர் உடல் அழியவும் இல்லை. நேரே கைலாயத்திற்கு சென்றுவிட்டார் என வரலாறு கூறுகிறது. இவரை திங்கள்கிழமை வெள்ளை ஆடை அணிந்து வடக்கு நோக்கி திருக்கயிலை இருப்பதாக பாவித்து வணங்கவும்.அடுத்து<br />
<br />
ரோகிணி நட்சத்திரம் சித்தர் மச்சமுனி ஆவார். இவர் ஜீவ சமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது. அடுத்து<br />
<br />
மிருகசீரிடம் நட்சத்திரம் சித்தர் பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி சங்கரன் கோயில் என்ற ஊரில் உள்ளது. இன்னொருவர் சட்டமுனி சித்தராவார். ஊர் திருவரங்கம் ஆகும். சில நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் இரண்டு சித்தர் வருவர். அடுத்து<br />
<br />
திருவாதிரை நட்சத்திரம் சித்தர் இடைக்காடார் ஜீவ சமாதி திருவண்ணாமலை. அடுத்து<br />
<br />
புனர்பூச நட்சத்திரம் சித்தர் தன்வந்தரி ஆவார். இவர் வைதீஸ்வரன் கோவிலில் ஜீவ சமாதி ஆனவர். அடுத்து<br />
<br />
பூசம் நட்சத்திரம் கமல முனி சித்தர் ஆவார். இவர் திருவாரூர் என்ற ஊரில் ஜீவ சமாதி உள்ளது.அடுத்து<br />
<br />
ஆயில்யம் நட்சத்திரம் இதற்கான சித்தர் அகத்தியர். இவர் ஒளிவட்டம் குற்றால பொதிகைமலையில் உள்ளது. சமாதி கேரள தலைநகரம் திருவனந்தபுரம் இங்கு உள்ளது. அடுத்து<br />
<br />
மகம் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் அவதரித்தவர் சிவ வாக்கிய சித்தர் ஆவார். இவர் ஜீவ சமாதி கும்பகோணத்தில் உள்ளது. பெரும்பாலும் சித்தர்கள் ஜீவ சமாதி சிவாலயமாகவே இருக்கும். அடுத்து<br />
<br />
பூரம் நட்சத்திரம் இவர் சக்தியின் அருளைப் பெற்ற நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் அவதரித்த தெய்வ பெண்மணி ஸ்ரீ ஆண்டாள் ஆவார். இவர் பூமாதேவி அம்சமாக உள்ளார். இவரை வணங்க ஏற்ற இடம் ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமே.ஏனெனில் இவர் தோன்றிய இடமே அங்குதான். அடுத்து ராமதேவ சித்தரும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்தான். இவர் மாற்று பெயர் யாகோப்பு என்றும் உள்ளது. இவர் ஜீவசமாதி அரபு நாடான மெக்காவில் உள்ளது. இவர் ஒளி வந்துபோகும் இடம் அழகர் மலையாகும். இவரை வழிபட நம் நாட்டினர் அழகர் மலைக்குத்தான் செல்கிறார்கள்.அடுத்து<br />
<br />
உத்திரம் நட்சத்திரம் இதில் அவதரித்த சித்தர் காகபுஜண்டர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் திருச்சி உறையூரில் உள்ளது. அடுத்து<br />
<br />
அஸ்தம் நட்சத்திரம் சித்தர் கருவூரார் ஆவார். இவர் சமாதி கரூரில் உள்ளது. அடுத்து இவர் ஒளிவட்டம் வந்து செல்லும் இடம் தஞ்சாவூர் பெரிய கோயில் ஆகும். அடுத்து<br />
<br />
சித்திரை நட்சத்திரம் இதற்கான சித்தர் புண்ணாக்கீசர் ஆவார். நண்ணா சேர் என்ற இடத்தில் இவர் ஜீவ சமாதி உள்ளது.அடுத்து<br />
<br />
சுவாதி நட்சத்திரம் இதற்கான சித்தர் புலிப்பாணி ஆவார். சமாதி பழனி அருகில் வைகாவூர் என்ற இடத்தில் உள்ளது. அடுத்து<br />
<br />
விசாகம் நட்சத்திரம் இதற்கான சித்தர் நந்தீசர் மற்றும் குதம்பை சித்தர் ஆவார். நந்தீசர் காசி நகரத்திலும் (பனாரஸ்), குதம்பை சித்தர் மாயவரத்திலும் ஜீவசமாதி உள்ளது. அடுத்து<br />
<br />
அனுஷம் நட்சத்திரம் சித்தர் வால்மீகி அல்லது வான்மீகர் என்று அழைக்கப்படுபவராவார். இவர் எட்டுக்குடியில் ஜீவசமாதி உள்ளது.<br />
அடுத்து<br />
<br />
கேட்டை நட்சத்திரம் இதற்கான சித்தர் பகவான் வியாசர் ஆவார். இவர் உடல் அழிவற்றது. எனவே காற்றோடு காற்றாக கலந்து இருப்பார். இவரை நினைத்தாலே போதும். அவ்விடம் வருவார். அடுத்து<br />
<br />
மூலம் நட்சத்திரம் இதற்கான சித்தர் பதஞ்சலி ஆவார். இவர் சமாதி ராமேஷ்வரத்தில் உள்ளது. அடுத்து<br />
<br />
பூராடம் நட்சத்திரம் இதற்கான சித்தர் பூரம் நட்சத்திரத்திற்கு சொல்லப்பட்ட ராமதேவர் எனும் யாகோப்பு சித்தரே ஆவார். அழகர்மலை மற்றும் மெக்காவில் ஜீவ ஒளி உள்ளது.<br />
அடுத்து<br />
<br />
உத்திராடம் நட்சத்திரம் இதற்கான சித்தபிரான் கொங்கணர். இவர் ஜீவசமாதி திருப்பதி ஆகும். அடுத்து<br />
<br />
திருவோணம் நட்சத்திரம் இதற்கான சித்தர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஆவார். இவர் சமாதி பாண்டிச்சேரி அடுத்து உள்ள பள்ளித்தென்னல் என்ற இடத்தில் உள்ளது. அடுத்து<br />
<br />
அவிட்டம் நட்சத்திரம் இதற்கான சித்தர் திருமூலர் ஆவார். இவர் சிதம்பரத்தில் ஜீவசமாதி உள்ளது. அடுத்து<br />
<br />
சதயம் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் கௌபாலர் ஆவார். இவரின் சமாதி இங்குதான் என வரலாறு தெளிவாக குறிக்கவில்லை. எனினும் மன ஒழுக்கத்தோடு இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார் எனக் குறிப்பு உள்ளது.அடுத்து<br />
<br />
பூராட்டாதி நட்சத்திரம் இதற்கான சித்தர் சோதிமுனி ஆவார். இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். அதனால் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அங்கு அருள்பாலிப்பார். தனித்து சமாதி என்று குறிப்பிடும்படியாக தெரிவிக்கவில்லை. அடுத்து<br />
<br />
உத்திரட்டாதி நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் டமரகர் சித்தர் ஆவார். இவரும் நேரிடையாக காற்றில் ஐக்கியமாகி கலந்துவிட்டதென வரலாறு கூறுகிறது. இவரை சிவாலயத்தில் ஒலிக்கும் இசை வாத்தியங்களில் ஏழாம் ஓசையில் ஒலியாக வந்து இறைவனுக்கு இசை முழக்கத்தால் சேவை செய்வார் எனக் குறிப்பிடுகிறார்கள். இவரை வீட்டிலேயே சிறுமணி ஓசையில் வரவழைத்து அவர் அங்கு வந்ததாக பாவித்து வணங்கலாம். அடுத்து<br />
<br />
ரேவதி நட்சத்திரம் இதற்கான சித்தர் சுந்தரானந்தர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் மதுரையில் உள்ளது, அறிக.<br />
<br />
மனத்தூய்மையும், உடல் தூய்மையும், கர்ம தூய்மையும் (பாவமற்ற கர்மாவைத் தொடர்தல்) தனிஅறையும் கொண்டு, ஒற்றை தீபம் மற்றும் ஏற்றி மன ஒருநிலைப்பாட்டோடு உங்கள் சித்தரை வணங்கி வாருங்கள். நிச்சயம் அவர்கள் அருளை தர தவறமாட்டார்கள். உங்களிடம் உள்ள பாவ கர்மாவிற்கு தயங்கி தெய்வம் துணைக்கு எளிதில் வரமாட்டார்கள். ஆனால் சித்தர்கள் அவ்வாறில்லை. தன்னை அழைத்தவர்களுக்கு எதாவது ஒரு வழியில் வழிகாட்ட தயங்கமாட்டார்கள். எனவே ஒரு தினத்தில் சில நிமிடங்களையாவது சித்தர் வழிபாட்டிற்கு செலவிடுங்கள். சித்தர் பூஜை செய்பவர்கள் நீத்தாருக்கு திதி பார்த்து தெவசம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குறைந்தது சித்த தியானத்திற்கு அரைமணி நேரமாவது ஒரு நிலையில் அமர வேண்டும். இந்த வழிமுறையை கடைபிடித்து உங்கள் கஷ்டத்தையும், வறுமையையும் போக்கிக்கொள்ளுங்கள்<br />
<br />
27 நட்சத்திரங்களும் சித்தர்களும்<br />
<br />
<br />
* அசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி<br />
<br />
* பரணி(மேஷம்) = ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கைநல்லூர்(நாகப்பட்டிணம்), ஸ்ரீபோகர், பழனி<br />
<br />
* கார்த்திகை1(மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி, ஸ்ரீதணிகைமுனி மற்றும் ஸ்ரீசம்ஹாரமூர்த்தி, திருச்செந்தூர்; ஸ்ரீபுலிப்பாணி, பழனி<br />
<br />
* கார்த்திகை 2, 3, 4 (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம்; ஸ்ரீவான்மீகர், எட்டுக்குடி; ஸ்ரீஇடைக்காடர், திரு அண்ணாமலை.<br />
<br />
* ரோகிணி (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம்,<br />
ஸ்ரீலஸ்ரீசிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர், திருவலம்<br />
<br />
* மிருகசீரிடம்1, (ரிஷபம்)=சிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர்.<br />
<br />
மிருகசீரிடம்2 (ரிஷபம்) = ஸ்ரீசட்டைநாதர், சீர்காழி மற்றும் ஸ்ரீரங்கம். ஸ்ரீபாம்பாட்டி சித்தர், மருதமலை மற்றும் சங்கரன்கோவில்.<br />
<br />
மிருகசீரிடம்3 (மிதுனம்)= ஸ்ரீபாம்பாட்டி சித்தர், மருதமலை மற்றும் சங்கரன் கோவில்.<br />
<br />
மிருகசீரிடம் 4 (மிதுனம்)=அமிர்த கடேஸ்வரர் ஆலயம், திருக்கடையூர்.<br />
<br />
* திருவாதிரை (மிதுனம்) = ஸ்ரீஇடைக்காடர் – திருஅண்ணாமலை, ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம்.<br />
<br />
* புனர்பூசம்1,2,3(மிதுனம்)=ஸ்ரீதன்வந்திரி,ஸ்ரீவசிஷ்டர் – வைத்தீஸ்வரன்கோவில்,<br />
<br />
புனர்பூசம் 4 (கடகம்)= ஸ்ரீதன்வந்திரி, வைத்தீஸ்வரன் கோவில்.<br />
<br />
* பூசம்(கடகம்)=ஸ்ரீகமலமுனி, திருவாரூர்; ஸ்ரீகுருதட்சிணா மூர்த்தி,திருவாரூர் (மடப்புரம்)<br />
<br />
* ஆயில்யம்(கடகம்)=ஸ்ரீகோரக்<br />
நல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்; ஸ்ரீஅகத்தியர், ஆதி கும்பேஸ்வரர்கோவில், கும்பகோணம்; ஸ்ரீஅகத்தியர், திருவனந்தபுரம், பொதியமலை, பாபநாசம்.<br />
<br />
* மகம் (சிம்மம்), ஸ்ரீராமதேவர்,அழகர் கோவில்,மதுரைஅருகில்.<br />
<br />
பூரம்(சிம்மம்)=ஸ்ரீராமதேவர்,அழகர் கோவில்,மதுரைஅருகில்.<br />
<br />
* உத்திரம்1(சிம்மம்)= ஸ்ரீராமத்தேவர், அழகர்கோவில், மதுரை அருகில், ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம்.<br />
<br />
உத்திரம் 2(கன்னி)=ஸ்ரீஸ்ரீசதா சிவப்ரும்மேந்திரா – நெரூர்;<br />
<br />
* உத்திரம் 3 = ஸ்ரீகரூவூரார் – கரூர் பசுபதீஸ்வரர் கோவில்<br />
<br />
* உத்திரம் 4 = ஆனிலையப்பர் கோவில் – கருவூர்; கல்யாணபசுபதீஸ்வரர் கோவில் – தஞ்சாவூர்.<br />
<br />
* அஸ்தம்(கன்னி)=ஆனிலையப்பர் கோவில் – கரூவூர், ஸ்ரீகரூவூரார் – கரூர்.<br />
<br />
* சித்திரை1,2(கன்னி)=ஸ்ரீகருவூரார் – கரூர்,ஸ்ரீசச்சிதானந்தர் – கொடுவிலார்ப்பட்டி.<br />
<br />
சித்திரை 3, 4(துலாம்) = ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மாயூரம்<br />
<br />
* சுவாதி (துலாம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் -மாயூரம்<br />
<br />
* விசாகம்1,2,3 (துலாம்) = ஸ்ரீநந்தீஸ்வரர் – காசி,ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மயிலாடுதுறை<br />
<br />
விசாகம் 4 (விருச்சிகம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மயிலாடு துறை, ஸ்ரீவான்மீகர் – எட்டுக்குடி, ஸ்ரீஅழுகண்ணி சித்தர் – நீலாயதாட்சியம்மன்கோவில், நாகப்பட்டிணம்<br />
<br />
* அனுஷம்(விருச்சிகம்)=<br />
ஸ்ரீவான்மீகி -எட்டுக்குடி, தவத்திரு.சிவஞான குருசாமிகள் என்ற அரோகரா சாமிகள், தோளூர்பட்டி, தொட்டியம்-621 215. திருச்சி மாவட்டம்.<br />
<br />
* கேட்டை(விருச்சிகம்)=ஸ்ரீவான்மீகி – எட்டுக்குடி, ஸ்ரீகோரக்கர் – வடக்குப் பொய்கைநல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்.<br />
<br />
* மூலம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி – ராமேஸ்வரம், சேதுக்கரை, திருப்பட்டூர்<br />
<br />
* பூராடம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி – ராமேஸ்வரம், ஸ்ரீசித்ரமுத்து அடிகளார் – பனைக்குளம் (இராமநாதபுரம்), ஸ்ரீபுலஸ்தியர் – ஆவுடையார்கோவில்.<br />
<br />
* உத்திராடம்1(தனுசு)=ஸ்ரீகொங்கணர் – திருப்பதி, ஸ்ரீதிருவலம் சித்தர் – திருவலம்(ராணிப்பேட்டை), ஸ்ரீலஸ்ரீமவுன குருசாமிகள் – தங்கால் பொன்னை (வேலூர் மாவட்டம்)<br />
<br />
* உத்திராடம் 2,3,4 (மகரம்) =ஸ்ரீகொங்கணர் – திருப்பதி<br />
<br />
* திருவோணம்(மகரம்)=ஸ்ரீகொங்கணர் – திருப்பதி, ஸ்ரீசதாசிவப்ரும்மேந்திரால் – நெரூர், ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீகருவூரார் – கரூர், ஸ்ரீபடாஸாகிப் – கண்டமங்கலம்.<br />
<br />
* அவிட்டம்1,2 (மகரம்); அவிட்டம் 3,4 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம் (திருமூலகணபதி சந்நிதானம்).<br />
<br />
* சதயம் (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீசட்டநாதர் – சீர்காழி, ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீதன்வந்திரி – வைத்தீஸ்வரன் கோவில்.<br />
<br />
* பூரட்டாதி 1,2,3 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீதட்சிணாமூர்த்தி – திருவாரூர். ஸ்ரீகமலமுனி – திருவாரூர்,ஸ்ரீகாளாங்கிநாதர் – திருவாடுதுறை, சித்தர் கோவில்,சேலம் ஸ்ரீசதாசிவப்ரும் மானந்த ஸ்ரீசிவபிரபாகர சித்த யோகி. பரமஹம்ஸர் – ஓமலூர் – பந்தனம்திட்டா.<br />
<br />
பூரட்டாதி4(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் – மதுரை, ஸ்ரீஆனந்த நடராஜ சுவாமிகள் – குட்லாம்பட்டி(மதுரை), பரம்மானந்த ஸ்ரீசித்தயோகி பரமஹம்ஸர்,ஓமலூர்.<br />
<br />
* உத்திரட்டாதி(மீனம்)=சுந்தரானந்தர் ஃ மதுரை; ஆனந்த நடராஜ சுவாமிகள் – குட்லாம்பட்டி(மதுரை), ஸ்ரீமச்சமுனி – திருப்பரங்குன்றம்.<br />
<br />
* ரேவதி(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் – மதுரை, குனியமுத்தூர் சுவாமிகள் என்ற சிவ சுப்ரமணிய சுவாமிகள் ஜீவசமாதி.<br />
<div style="text-align: center;">
<b><span style="color: yellow;">சித்தர் மூல மந்திரங்கள் :</span></b></div>
<br />
1. அஸ்வினி நட்சத்திரம் – மேஷ இராசி :<br />
ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீ போகர் மகரிஷியே நம :<br />
<br />
2. பரணி நட்சத்திரம் – மேஷ இராசி :<br />
ஓம் ஸ்ரீம் றம் டம் டங் றங் ஹ்ணாங் ஹ்ரீங் ஸ்ரீ கோரக்க சித்தரே நம :<br />
<br />
3. கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதம் – மேஷ இராசி :<br />
ஓம் ஸ்ரீம் ஹவாங் ஹிலாங் ஸ்ரீ போகரிஷியே நம :<br />
<br />
4. கார்த்திகை நட்சத்திரம் 2,3,4ம் பாதம் – ரிஷப இராசி :<br />
ஓம் ஸ்ரீம் றம் டம் ஹ்ரீங் ஸ்ரீ மச்சமுனிவரே நம :<br />
<br />
5. ரோகிணி நட்சத்திரம் – ரிஷப இராசி :<br />
ஓம் ஸ்ரீம் ஸம் அம் உம் ஸ்ரீ வான்மீகரே நம :<br />
<br />
6. மிருகசீரிடம் நட்சத்திரம் 1ம் பாதம் – ரிஷப இராசி :<br />
ஓம் ஸ்ரீம் ருங் குருங் ஸ்ரீ மச்ச முனிவரே நம :<br />
<br />
7. மிருகசீரிடம் நட்சத்திரம் 2ம் பாதம் – ரிஷப இராசி :<br />
ஸ்ரீம் ஸம் அம் உம் ஸ்ரீ சட்டை நாதரே நம :<br />
<br />
8. மிருகசீரிடம் நட்சத்திரம் 3ம் பாதம் – ரிஷப இராசி :<br />
ஓம் ஸ்ரீம் ஹவாங் ஹிலாங் ஸ்ரீ பாம்பாட்டி சித்தரே நம :<br />
<br />
9. மிருகசீரிடம் நட்சத்திரம் 4ம் பாதம் – மிதுன இராசி :<br />
ஸ்ரீம் றம் ஹ்ரீங் ஸ்ரீ பாம்பாட்டி சித்தரே நம :<br />
<br />
10. திருவாதிரை நட்சத்திரம் – மிதுன இராசி :<br />
ஸ்ரீம் குரு – துரு – குரு – வசி ஸ்ரீ திருமூலதேவரே நம :<br />
<br />
11. புனர்பூசம் நட்சத்திரம் 1,2,3ம் பாதம் – மிதுன இராசி :<br />
ஸ்ரீம் ஸம் அம் உம் – ஜீம் ஸ்ரீ தன்வந்திரி சித்தரே நம :<br />
<br />
12. புனர்பூசம் நட்சத்திரம் 4ம் பாதம் – கடக இராசி :<br />
ஸ்ரீ தம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ தன்வந்திரி பகவான் நம :<br />
<br />
13. பூசம் – நட்சத்திரம் கடக இராசி :<br />
ஓம் ஸ்ரீம் – குங் -குருங் குரிங் -ஸ்ரீ கமலமுனியே நம :<br />
<br />
14. ஆயில்யம் நட்சத்திரம் – கடக இராசி :<br />
ஓம் ஸ்ரீம் ம் -அம் – உம் ஸ்ரீ அகத்தியப் பெருமானே நம :<br />
<br />
15. மகம் நட்சத்திரம் – சிம்ம இராசி :<br />
ஓம் ஹம் – ஸம் – ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீ ராமதேவரே நம :<br />
<br />
16. பூரம் நட்சத்திரம் – சிம்ம இராசி :<br />
ஓம் ஸ்ரீம் – ஸ்ரீம் -ஸ்ரீம் ஹ்ரீம் – ஹ்ரீம் ஸ்ரீ ராமதேவரே நம :<br />
<br />
17. உத்திரம் நட்சத்திரம் 1ம் பாதம் – சிம்ம இராசி :<br />
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் -றீம் – ஸ்ரீ இராம தேவரே நம<br />
18. உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் – கன்னி இராசி :<br />
ஓம் ஐம் கிளீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீ கரூர் சித்தரே நம :<br />
<br />
19. உத்திரம் நட்சத்திரம் 3ம் பாதம் – கன்னி இராசி :<br />
ஐம் ஸ்ரீம் ஹ்ரீம் ரீம் கருவூராரே நம :<br />
<br />
20. உத்திரம் நட்சத்திரம் 4ம் பாதம் – கன்னி இராசி :<br />
ஓம் ஹ்ரீம் ஐயுஞ் சவ்வும் க்லீயும் கருவூர் சித்தரே நம :<br />
<br />
21. அஸ்தம் நட்சத்திரம் – கன்னி இராசி :<br />
ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ கரூர்தேவ நம :<br />
<br />
22. சித்திரை நட்சத்திரம் 1,2ம் பாதம் – கன்னி இராசி :<br />
ஸ்ரீம் ஸம் அம் ஐம் க்ளீம் ஸ்ரீ கரூர் சித்தரே நம :<br />
<br />
23. சித்திரை நட்சத்திரம் 3,4ம் பாதம் – துலாம் இராசி :<br />
ஸ்ரீம் -ஹ்ரீம் ஸ்ரீம் றீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீ குதம்பை சித்தரே நம :<br />
<br />
24. சுவாதி நட்சத்திரம் – துலாம் இராசி :<br />
ஓம் க்ளீம் ஸ்ரீம் றீம் ஸ்ரீ குதம்பை சித்தரே நம :<br />
<br />
25. விசாகம் நட்சத்திரம் 1,2,3ம் பாதம் – துலாம் இராசி :<br />
ஓம் ஸ்ரீம் ருங் அங் சிங் ஹ்ரீம் ஸ்ரீ குதம்பை சித்தரே நம :<br />
<br />
26. விசாகம் நட்சத்திரம் 4ம் பாதம் – விருச்சிக இராசி :<br />
ஓம் ஹ்ரீம் ஹ்ராம் ஐம் க்ளீம் ஸ்ரீம் ஸ்ரீ வான்மீகரே நம :<br />
<br />
27. அனுஷம் நட்சத்திரம் – விருச்சிக இராசி :<br />
ஓம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீம் ஸ்ரீ வான்மீகரே நம :<br />
<br />
28. கேட்டை நட்சத்திரம் – விருச்சிக இராசி :<br />
ஓம் ஸ்ரீம் ரீம் ஹ்ரீம் வான்மீகரே நம :<br />
<br />
29. மூலம் நட்சத்திரம் – தனுசு இராசி :<br />
ஓம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீம் ஹ்ரீம் ஹ்ராங் ருங் – குருங் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியே நம :<br />
<br />
30. பூராடம் நட்சத்திரம் – தனுசு இராசி :<br />
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ பதஞ்சலி மமுனிவரே நம :<br />
31. உத்திராடம் நட்சத்திரம் 1ம் பாதம் – தனுசு இராசி :<br />
ஓம் ஸ்ரீம் க்ளீம் ஐம் ஸம் அம் ஓம் ஜூம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம :<br />
<br />
32. உத்திராடம் நட்சத்திரம் 2,3,4ம் பாதம் – மகர இராசி :<br />
ஓம் ஐம் க்ளீம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம :<br />
<br />
33. திருவோணம் நட்சத்திரம் – மகர இராசி :<br />
ஓம் ஐம் சௌம் க்ளீம் ஹம் ஸ்ரீம் றம் டம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம :<br />
<br />
34. அவிட்டம் நட்சத்திரம் 1,2ம் பாதம் – மகர இராசி :<br />
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம :<br />
<br />
35. அவிட்டம் நட்சத்திரம் 3,4ம் பாதம் – கும்ப இராசி :<br />
ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ திருமூலரே நம :<br />
<br />
36. சதயம் நட்சத்திரம் – கும்ப இராசி :<br />
ஓம் ஸ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீம் ருங் ஸ்ரீம் ஸம் ஸ்ரீ சட்டைநாதரே நம :<br />
<br />
37. பூரட்டாதி நட்சத்திரம் 1,2,3ம் பாதம் – கும்ப இராசி :<br />
ஓம் ஸ்ரீம் ஸம் அம் உம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ கமலமுனிவரே நம :<br />
<br />
38. பூரட்டாதி நட்சத்திரம் 4ம் பாதம் – மீன இராசி :<br />
ஓம் க்ளீம் ஐம் சௌம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ சிவப்பிரபாகர சித்தயோகி பாம்பாட்டி சித்தரே நம :<br />
<br />
39. உத்திரட்டாதி நட்சத்திரம் – மீன இராசி :<br />
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் றீம் ஐம் க்ளீம் ஓம் சுந்தரானந்தர் என்ற வல்லபச் சித்தரே நம :<br />
<br />
40. ரேவதி நட்சத்திரம் – மீன இராசி :<br />
ஓம் ஸ்ரீம் ஸம் அம் உம்<br />
<div>
<br /></div>
</div>
7thsenshttp://www.blogger.com/profile/15929479294078616300noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-9124861613818987934.post-73638972261292587412016-03-05T00:40:00.004-08:002016-03-05T00:40:48.922-08:00இராமதேவர், வசியங்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<b><span style="color: yellow;">இராமதேவர், வசியங்கள்</span></b></div>
கடுமையான யோகங்கள், தியானங்கள் செய்யும் போது, மனிதர்கள் மற்றும் விலங்கினங்களினால் இடையூறு எதுவும் ஏற்படாமல் இருக்க ஒரு வகையான வசிய திலகத்தை சித்தர் பெருமக்கள் பயன்பாட்டில் வைத்திருந்தனர். அதிலும் குறிப்பாக சிவயோகம் செய்திடும் போது இத்தகைய திலகத்தை அணிந்து கொண்டனர் என்கிற தகவல் இராமதேவர் அருளிய "இராமதேவர் சிவயோகம்" என்னும் நூலில் விவரிக்கப்பட்டிருக்கிறது.<br />
<br />
<div style="text-align: center;">
<span style="color: yellow;">அந்த பாடல்கள் பின்வருமாறு..</span></div>
<div style="text-align: center;">
<span style="color: yellow;"><br /></span></div>
<div style="text-align: center;">
<span style="color: yellow;">ஆமப்பா சிவயோகத் திருக்கும்போது</span></div>
<div style="text-align: center;">
<span style="color: yellow;">அருளான திலர்தவகை யொன்றுகேளு</span></div>
<div style="text-align: center;">
<span style="color: yellow;">நாமப்பா சொல்லுகிறோ மண்டத்தோட</span></div>
<div style="text-align: center;">
<span style="color: yellow;">நலமான மரமஞ்சள் கஸ்தூரிமஞ்சள்</span></div>
<div style="text-align: center;">
<span style="color: yellow;">தாமப்பா சாதிக்காய் சாதிப்பத்திரி</span></div>
<div style="text-align: center;">
<span style="color: yellow;">தாழம்பூத் தாளுடனே சந்தனமும்பூவுங்</span></div>
<div style="text-align: center;">
<span style="color: yellow;">காமப்பால் கல்மதமுங் கஸ்தூரிகோவுங்</span></div>
<div style="text-align: center;">
<span style="color: yellow;">களங்கமற்ற புழுகுடனே கற்ப்பூரங்கூட்டே.</span></div>
<div style="text-align: center;">
<span style="color: yellow;"><br /></span></div>
<div style="text-align: center;">
<span style="color: yellow;">கூட்டப்பா சரக்குவகை பதிமூன்றுந்தான்</span></div>
<div style="text-align: center;">
<span style="color: yellow;">குறிப்பாக வோரிடையா யெடுத்துக்கொண்டு</span></div>
<div style="text-align: center;">
<span style="color: yellow;">நாட்டப்பா கல்வமதிற் பொடித்துக்கொண்டு</span></div>
<div style="text-align: center;">
<span style="color: yellow;">நலமான பழச்சாறும் பன்னீர்வார்த்து</span></div>
<div style="text-align: center;">
<span style="color: yellow;">ஆட்டப்பா வடிமிளகு போலேமைந்தா</span></div>
<div style="text-align: center;">
<span style="color: yellow;">வரைக்கையிலே புழுகிட்டு அரைத்துநன்றாய்</span></div>
<div style="text-align: center;">
<span style="color: yellow;">நீட்டப்பா கயிரதுபோல் நீட்டிக்கொண்டு</span></div>
<div style="text-align: center;">
<span style="color: yellow;">நிழலுரத்திப் பதனமதாய் வைத்தக்கொள்ளே.</span></div>
<div style="text-align: center;">
<span style="color: yellow;"><br /></span></div>
<div style="text-align: center;">
<span style="color: yellow;">கொள்ளுகிற விதமென்ன வென்பாயாகிற்</span></div>
<div style="text-align: center;">
<span style="color: yellow;">குணமாகச் சிவயோகத் திருக்கும்போது</span></div>
<div style="text-align: center;">
<span style="color: yellow;">நல்லுருவாய்த் திலர்தமதை யெடுத்துக்கொண்டு</span></div>
<div style="text-align: center;">
<span style="color: yellow;">நாட்டப்பா குருபதிமேற் றிலர்தம்போடச்</span></div>
<div style="text-align: center;">
<span style="color: yellow;">சொல்லுகிற மந்திரந்தா னொன்றுகேளு</span></div>
<div style="text-align: center;">
<span style="color: yellow;">சுருக்கடா சுவாவென்று திலர்தம்போட்டு</span></div>
<div style="text-align: center;">
<span style="color: yellow;">உள்ளுறவா யிடுதயத்தின் மனதைநாட்டி</span></div>
<div style="text-align: center;">
<span style="color: yellow;">உம்மெனவே தம்பித்து வொடுங்கிநில்லே.</span></div>
<div style="text-align: center;">
<span style="color: yellow;"><br /></span></div>
<div style="text-align: center;">
<span style="color: yellow;">ஒடுங்கியந்த வொடுக்கமதி லொடுங்கிநில்லு</span></div>
<div style="text-align: center;">
<span style="color: yellow;">வுலகத்தி லுள்ளவர்க ளுன்னைக்கண்டாற்</span></div>
<div style="text-align: center;">
<span style="color: yellow;">படிந்துவுந்தன் பாதத்திற் பணிவாரையா</span></div>
<div style="text-align: center;">
<span style="color: yellow;">பக்குவமாய்ப் பிணியாளர் பணிந்துகண்டால்</span></div>
<div style="text-align: center;">
<span style="color: yellow;">நடுங்கிமிகப் பணிந்தோடும் பிணிகளெல்லாம்</span></div>
<div style="text-align: center;">
<span style="color: yellow;">நலமான சிவயோகச் செந்தீப்பட்டு</span></div>
<div style="text-align: center;">
<span style="color: yellow;">மடிந்துவிடும் பிணிகளெல்லா முலகிலுள்ளோர்</span></div>
<div style="text-align: center;">
<span style="color: yellow;">மண்டினிற்பா ருன்சமுகங் கண்டிலாரே.</span></div>
<div style="text-align: center;">
<br /></div>
மரமஞ்சள், கஸ்தூரி மஞ்சள், சாதிக்காய், சாதிபத்திரி, தாழம்பூ இதழ், சந்தனம், முப்பூ, காமப்பால், கல்மத்தம், கஸ்தூரி, கோரோசனை, புனுகு, கற்பூரம் ஆகிய பதின்மூன்று சரக்குவகைகளை சம எடையில் எடுத்து கல்வத்தில் இட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டுமாம். மேலும் அதனுடன் பழச்சாறும் பன்னீரும் சேர்த்து மீண்டும் மைப் போல அரைக்க வேண்டுமாம் அப்போது மிளகு நிறத்தில் அந்த கலவை கிடைக்கும். இந்த கலவையுடன் மேலும் ஒரு பங்கு புனுகு சேர்த்து நன்கு அரைத்து கயிறுபோன்று நீளவடிவாக உருட்டி நிழலில் உலர்த்தி சேமித்துக் கொள்ள வேண்டுமாம்.<br />
<br />
சிவயோகம் செய்யும் போது முன்னர் சேமித்த கலவையில் சிறிது எடுத்து புருவமத்தியில் திலகமாக இட்டுக் கொள்ள வேண்டுமாம். அப்போது பார்க்கும் மக்கள் எல்லோரும் பணிந்து வணங்கிச் செல்வார்களாம். அத்துடன் மனிதர்கள் உள்ளிட்ட எந்த ஒரு உயிரினமும் எந்தவித இடையூறும் செய்யமாட்டார்கள் என்கிறார் இராமதேவர். </div>
7thsenshttp://www.blogger.com/profile/15929479294078616300noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9124861613818987934.post-51477838040517400482016-03-04T20:31:00.002-08:002016-03-04T20:34:50.711-08:00ஸ்ரீபரதேசி ஆறுமுகசாமி(ஜீவசமாதி) சன்னிதானம்,கோட்டுப்பாக்கம், சேத்துப்பட்டு தாலுக்கா, தி.மலை.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஸ்ரீபரதேசி ஆறுமுகசாமி(ஜீவசமாதி)<br />
சன்னிதானம்,கோட்டுப்பாக்கம்,<br />
சேத்துப்பட்டு தாலுக்கா, தி.மலை.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2qJpHIbncZssxH3Lfr_T-NPMorLSMXjxDnD_43UEdl6H2lM07HDxS-_-q4I0KMY5_vFHfXiR8TX1JZUwSp3rXchmDMLIvhPjkPXgYO0VB2aOQ4XKIBhGopmbDgO0iQGCIZRpX4nG7-HlA/s1600/zz.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2qJpHIbncZssxH3Lfr_T-NPMorLSMXjxDnD_43UEdl6H2lM07HDxS-_-q4I0KMY5_vFHfXiR8TX1JZUwSp3rXchmDMLIvhPjkPXgYO0VB2aOQ4XKIBhGopmbDgO0iQGCIZRpX4nG7-HlA/s320/zz.jpg" width="320" /></a></div>
<br />
ஓம் சிவாய நம !<br />
தெய்வமடா தெரிசனத்திற் கண்டபோது<br />
தேவரோடு முனிவர்களுங் காணமாட்டார்<br />
கவசமடா கைவல்யந் தன்னைப்பாரு<br />
கருத்திலே தோணுமடா கண்டுபாரு<br />
சைவமடா சாயுட்ச பதவியாகும்<br />
சகலருக்குந் தெய்வஞ் சண்முகனுமாச்சு<br />
யெய்துமடா பேரின்பக் கனையின்லே<br />
யிதமறியா மூடர்களை யெய்துபாரே !<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifo2Msr0OB-5psg1epy8JVNk5db7Ad87Z03Uj685XeqmlOMU2TXVsVYhT3Vgy7sS5wTyUbZDzGU4u9GiycQ-XKVCrsaMpPFIhHM23RcYhTQVKZx6F54pLMvTWCKX61led8iTJmF8hvFkrJ/s1600/z1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifo2Msr0OB-5psg1epy8JVNk5db7Ad87Z03Uj685XeqmlOMU2TXVsVYhT3Vgy7sS5wTyUbZDzGU4u9GiycQ-XKVCrsaMpPFIhHM23RcYhTQVKZx6F54pLMvTWCKX61led8iTJmF8hvFkrJ/s400/z1.jpg" width="223" /></a></div>
<br />
யெய்துபா ரென்றுசொன்ன குருவே அய்யா<br />
யெக்காலந் துயரமெல்லாந் தீருமோசொல்<br />
வயதுமே பத்தான கன்னிதானும்<br />
வையகத்தி லடுமையெனக் கொள்வதெப்போ<br />
செய்துபா ரென்றுமே சொல்லவேண்டாம்<br />
செய்கரும மெந்தனுக்குச் சொல்லவேணும்<br />
மையதுபார் காமனுட பாணந்தானும்<br />
மார்பில் தைக்காமல் மனம்காட்டு வீரே !<br />
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQvVS0BgTVHDTQSk-YhmIGcKbuf7GD-bUgXa9KGTh8FbhUqYsy3CtA17f_MBYLJBee-fXFDkSgk7R9P2r93Im4hCZkX43Y58Ff5zjRVZfyl6nezXue-PKzFvJi-W_YxsDfdv88B-Pn47Bn/s1600/zzz.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQvVS0BgTVHDTQSk-YhmIGcKbuf7GD-bUgXa9KGTh8FbhUqYsy3CtA17f_MBYLJBee-fXFDkSgk7R9P2r93Im4hCZkX43Y58Ff5zjRVZfyl6nezXue-PKzFvJi-W_YxsDfdv88B-Pn47Bn/s320/zzz.jpg" width="320" /></a></div>
<br />
<br />
ஸ்ரீபரதேசி ஆறுமுகசாமி குருவின் திருவருள் பார்வைபெற்று ஞானமறிந்தோர்க்கு நமனில்லை நாதனருளால் பதவி நாடும் வேதமறை<br />
போற்றும் நாதன் பாதம் பணிவோம் வாருங்கள் !</div>
7thsenshttp://www.blogger.com/profile/15929479294078616300noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9124861613818987934.post-86572161951659021182016-02-25T05:30:00.002-08:002016-02-25T05:33:34.389-08:00108 சித்தர்கள் மற்றும் ஜீவா சமாதியான இடங்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
108 சித்தர்கள் மற்றும் ஜீவ சமாதியான இடங்கள்<br />
1. திருமூலர் – சிதம்பரம்.<br />
2. போகர் – பழனி என்கிற ஆவினன்குடி.<br />
3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.<br />
4. புலிப்பாணி – பழனி அருகில் வைகாவூர்.<br />
5. கொங்கணர் – திருப்பதி, திருமலை<br />
6. மச்சமுனி – திருப்பரங்குன்றம், திருவானைக்கால்<br />
7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் – மதுரை.<br />
8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம்.<br />
9. அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.<br />
10. தேரையர் – தோரணமலை (மலையாள நாடு)<br />
11. கோரக்கர் – பேரூர்.<br />
12. பாம்பாட்டி சித்தர் – மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.<br />
13. சிவவாக்கியர் – கும்பகோணம்.<br />
14. உரோமரிசி – திருக்கயிலை<br />
15. காகபுசுண்டர் – திருச்சி, உறையூர்.<br />
16. இடைக்காட்டுச் சித்தர் – திருவண்ணாமலை<br />
17. குதம்ப்பைச் சித்தர் – மயிலாடுதுறை<br />
18. பதஞ்சலி சித்தர் – சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.<br />
19. புலத்தியர் – பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.<br />
20. திருமூலம் நோக்க சித்தர் – மேலை சிதம்பரம்.<br />
21. அழகண்ண சித்தர் – நாகப்பட்டினம்.<br />
22. நாரதர் – திருவிடைமருதூர், கருவை நல்லூர்.<br />
23. இராமதேவ சித்தர் – அழகர் மலை<br />
24. மார்க்கண்டேயர் – கருவை நல்லூர்.<br />
25. புண்ணாக்கீசர் – நண்ணாசேர்.<br />
26. காசிபர் – ருத்ரகிரி<br />
27. வரதர் – தென்மலை<br />
28. கன்னிச் சித்தர் – பெருங்காவூர்.<br />
29. தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில்<br />
30. நந்தி சித்தர் – காசி, திருவாவடுதுறை, காளங்கி.<br />
31. காடுவெளி சித்தர் – திருக்காஞ்சிபுரம்.<br />
32. விசுவாமித்திரர் – காசி, திருவாவடுதுறை, காளங்கி.<br />
33. கௌதமர் – திருவருணை, திருவிடைமருதூர்.<br />
34. கமல முனி – ஆரூர்<br />
35. சந்திரானந்தர் – திருவாஞ்சியம்.<br />
36. சுந்தரர் – வாரிட்சம், திருவாரூர்.<br />
37. காளங்கி நாதர் – திருக்கடவூர், திருப்பணந்தாள்.<br />
38. வான்மீகி – எட்டிக்குடி, திருவையாறு.<br />
39. அகப்பேய் சித்தர் – திருவையாறு, எட்டிக்குடி.<br />
40. பட்டினத்தார் – திருவொற்றியூர்.<br />
41. வள்ளலார் – வடலூர்.<br />
42. சென்னிமலை சித்தர் – கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.<br />
43. சதாசிவப் பிரம்மேந்திரர் – நெரூர்.<br />
44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் – பேலூர் மடம்<br />
45. ராகவேந்திரர் – மந்திராலயம்.<br />
46. ரமண மகரிஷி – திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.<br />
47. குமரகுருபரர் – காசி.<br />
48. நடன கோபால நாயகி சுவாமிகள் – காதக்கிணறு.<br />
49. ஞானானந்த சுவாமிகள் – அனைத்து தபோவனங்கள்.<br />
50. ஷீரடி சாயிபாபா – ஷீரடி.<br />
51. சேக்கிழார் பெருமான் – மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.<br />
52. ராமானுஜர் – ஸ்ரீரங்கம்.<br />
53. பரமஹம்ச யோகானந்தர் – கலிபோர்னியா.<br />
54. யுக்தேஸ்வரர் – பூரி.<br />
55. ஜட்ஜ் சுவாமிகள் – புதுக்கோட்டை<br />
56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.<br />
57. கண்ணப்ப நாயனார் – காளஹஸ்தி.<br />
58. சிவப்பிரகாச அடிகள் – திருப்பழையாறை வடதளி.<br />
59. குரு பாபா ராம்தேவ் – போகரனிலிருந்து 13 கி.மி.<br />
60. ராணி சென்னம்மாள் – பிதானூர், கொப்புலிமடம்.<br />
61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி – மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.<br />
62. குழந்தையானந்த சுவாமிகள் – மதுரை காளவாசல்.<br />
63. முத்து வடுகநாதர் – சிங்கம் புணரி.<br />
64. இராமதேவர் – நாகப்பட்டிணம்.<br />
65. அருணகிரிநாதர் – திருவண்ணாமலை.<br />
66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.<br />
67. மௌன சாமி சித்தர் – தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.<br />
68. சிறுதொண்டை நாயனார் – திருச்செட்டாங்குடி.<br />
69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் – பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.<br />
70. வல்லநாட்டு மகாசித்தர் – வல்லநாடு.<br />
71. சுப்பிரமணிய சித்தர் – ரெட்டியப்பட்டி.<br />
72. சிவஞான பாலசித்தர் – மயிலாடுதுறை முருகன் சந்நிதி.<br />
73. கம்பர் – நாட்டரசன் கோட்டை.<br />
74. நாகலிங்க சுவாமிகள் – புதுவை அம்பலத்தாடையார் மடம்.<br />
75. அழகர் சுவாமிகள் – தென்னம்பாக்கம்.<br />
76. சிவஞான பாலைய சுவாமிகள் – புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.<br />
77. சித்தானந்த சுவாமிகள் – புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.<br />
78. சக்திவேல் பரமானந்த குரு – புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.<br />
79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் – வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.<br />
80. அக்கா சுவாமிகள் – புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.<br />
81. மகான் படே சுவாமிகள் – சின்னபாபு சமுத்திரம்.<br />
82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் – புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.<br />
83. பகவந்த சுவாமிகள் – புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.<br />
84. கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.<br />
85. சாந்த நந்த சுவாமிகள் – ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.<br />
86. தயானந்த சுவாமிகள் – புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.<br />
87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் – பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.<br />
88. ஞானகுரு குள்ளச்சாமிகள் – புதுவை.<br />
89. வேதாந்த சுவாமிகள் – புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.<br />
90. லஷ்மண சுவாமிகள் – புதுவையிலுள்ள புதுப்பட்டி.<br />
91. மண்ணுருட்டி சுவாமிகள் – புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.<br />
92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் – பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.<br />
93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) – திருவண்ணாமலை.<br />
94. கோட்டூர் சுவாமிகள் – சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.<br />
95. தகப்பன் மகன் சமாதி – கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.<br />
96. நாராயண சாமி அய்யா சமாதி – நாகர்கோவில்.<br />
97. போதேந்திர சுவாமிகள் – தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.<br />
98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் – சென்னை பூந்தமல்லி.<br />
99. வன்மீக நாதர் – எட்டிக்குடி.<br />
100. தம்பிக்கலையான் சித்தர் – சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.<br />
101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் – திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.<br />
102. குகை நாச்சியார் மகான் – திருவண்ணாமலை.<br />
103. வாலைகுருசாமி – சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.<br />
104. பாம்பன் சுவாமிகள் – திருவான்மியூர்.<br />
105. குமாரசாமி சித்தர் சுவாமிகள் – கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.<br />
106. பெரியாழ்வார் சுவாமிகள் – அழகர் கோவில் (மதுரை)<br />
107. மாயம்மா ஜீவசமாதி – கன்னியாகுமரி.<br />
108. பரமாச்சாரியார் ஜீவசமாதி – காஞ்சிபுரம்.<br />
<br />
ஆன்மீக சிந்தனையில் அடியேன் .....<br />
Ganesan Pondicherry -</div>
7thsenshttp://www.blogger.com/profile/15929479294078616300noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-9124861613818987934.post-64750191580009912622016-02-20T05:52:00.003-08:002016-02-20T05:52:55.727-08:00புதுவையை சுற்றி உள்ள சித்தர்கள் ஜீவசமாதி <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<b>புதுவையில் ஜீவசமாதி அடைந்து அருள் ஒளிவீசும் 41சித்தர்கள் </b></div>
<b>1 ஸ்ரீ தொள்ளகாது சுவாமிகள் , ஸ்ரீ மணக்குள விநாயகர் ஆலயம் புதுவை , </b><br />
<b>2 . ஸ்ரீ மகான் படேசாஹிப் சுவாமிகள் சின்னபபுசமுதிரம் , கண்டமங்கலம் </b><br />
<b>3 .ஸ்ரீ சிதானந்த சுவாமிகள் கருவடிக்குப்பம் புதுவை </b><br />
<b>4 .ஸ்ரீ குரு அக்கா சுவாமிகள் வைத்திக்குப்பம் ,புதுவை . </b><br />
<b>5 ஸ்ரீ நாராயண பரதேசி சுவாமிகள் , வைத்திக்குப்பம், புதுவை . </b><br />
<b>6 ஸ்ரீ கம்பளி நான தேசிக சுவாமிகள் , தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை , புதுவை . </b><br />
<b>7 ஸ்ரீ கதிர்வேல் சுவாமிகள், 3 வது குறுக்குத்தெரு , பிருந்தாவனம் , புதுவை . </b><br />
<b>8 ஸ்ரீ சக்திவேல் பரமானந்த சுவாமிகள் , கராமணிகுப்பம், புதுவை </b><br />
<b>9 ஸ்ரீ சந்தானந்தா சுவாமிகள் சிருங்கேரிமடம் செரேதோப்பு எதிரே எல்லைபில்லைசாவடி புதுவை </b><br />
<b>10 .ஸ்ரீ சுப்ரமணிய அபிநவசசிதானந்தா சுவாமிகள் ,சிருங்கேரிமடம் செரதொப்பு எதிரே எல்லைபில்லைச்சாவடி , புதுவை . </b><br />
<b>11 ஸ்ரீ பெரியவர்களுக்கு பெரியவர் சுவாமிகள் தட்டஞ்ச்சாவடி, புதுவை </b><br />
<b>12 ஸ்ரீ வேதானந்த சுவாமிகள் ,திருவள்ளுவர்நகர், முத்தியால்பேட்டை புதுவை . </b><br />
<b>13 ஸ்ரீ சடையப்பர் சுவாமிகள் வழுதாவூர் சாலை ,ராணி மருத்துவமனை எதிரே , புதுவை </b><br />
<b>14 ஸ்ரீ மௌலனசாஹிப் சுவாமிகள் , முல்லா வீதி புதுவை . </b><br />
<b>15 ஸ்ரீ நாகலிங்க சுவாமிகள் ,அம்பலத்தடையார் மடம்வீதி புதுவை . </b><br />
<b>16 .ஸ்ரீ மண்ணுருட்டி சுவாமிகள் தென்னஞ்சாலை ரோடு சுப்ப்ரயபிள்ளை சமுத்திரம் புதுவை . 17 ஸ்ரீ தேங்காய் சுவாமிகள் வில்லியனூர் புதுவை </b><br />
<b>18 ஸ்ரீ ராமபரதேசி சுவாமிகள் சுல்தான்பேட்டை வில்லியனூர் புதுவை . </b><br />
<b>19 ஸ்ரீ பவழக்கொடி சித்தர் சுவாமிகள் . சோம்பட்டு. திருக்கனூர் வழி புதுவை . </b><br />
<b>20 ஸ்ரீ ரங்கசாமி சித்தர் சுவாமிகள் சோம்பட்டு திருக்கனூர் வழி , புதுவை . </b><br />
<b>21 ஸ்ரீ தட்சணாமூர்த்தி சுவாமிகள் , பள்ளிதென்னல், புதுவை </b><br />
<b>22 .ஸ்ரீ குருசாமி அம்மாள் சுவாமி எ அரியூர் , புதுவை </b><br />
<b>23 ஸ்ரீ ல ஸ்ரீ அருள் சக்தி அன்னையீன் சித்தர் பீடம் , பிள்ளையர்குப்பம், கிருமாம்பாக்கம் , புதுவை </b><br />
<b>24 ஸ்ரீ ல ஸ்ரீ உலகநாத களரானந்த சுவாமிகள் சோரியங்குப்பம் பள்ளி பாகூர் ,புதுவை </b><br />
<b>25 ஸ்ரீ அப்பர் சுவாமிகள் எம்பலம். புதுவை . </b><br />
<b>26 ஸ்ரீ மகான் வண்ணரபரதேசி சுவாமிகள் ஒதியம் பட்டு புதுவை </b><br />
<b>27 ஸ்ரீ வியோமா சுவாமிகள் கன்னுவாபேட்டை, வில்லியனூர் புதுவை . </b><br />
<b>28 ஸ்ரீ கணபதி சுவாமிகள் , கருவடிக்குப்பம் , எடயஞ்சாவடி , புதுவை </b><br />
<b>29 ஸ்ரீ சிவபிரகாச சுவாமிகள் நல்லாத்தூர் எம்பலம், புதுவை . </b><br />
<b>30 ஸ்ரீ அழகர் சுவாமிகள், தென்னம்பாக்கம் புதுவை . </b><br />
<b>31 ஸ்ரீ கழுவெளி சித்தர் சுவாமிகள் , திருச்சிற்றம்பலம் இரும்பை .புதுவை </b><br />
<b>32 ஸ்ரீ சிவஞ்ன பாலய சித்தர் சுவாமிகள் , பொம்மையார் பாளையம் புதுவை . </b><br />
<b>33 ஸ்ரீ சிவஞ்ன பால சித்தர் சுவாமிகள் ,மைலம் முருகம் கோவிலுக்கு வலபுறம் ,. </b><br />
<b>34 ஸ்ரீ சுப்பராய பரதேசிஸ்வமிகள் , மைலம் (மூலவர் இருக்குமிடத்தில் ஜீவசமாதி) </b><br />
<b>35 ஸ்ரீ பகவந் சுவாமிகள் , புதுப்பாளையம் கடலூர். </b><br />
<b>36 .ஸ்ரீ தயானந்த சுவாமிகள் , புதுப்பாளையம் கடலூர். </b><br />
<b>37 ஸ்ரீ தேவராஜ் சுவாமிகள் , வன்னியனல்லூர் ,சூனம்பேடு </b><br />
<b>38 ஸ்ரீ சத்குரு நித்தியானந்த சுவாமிகள் கோழிப்பாக்கம் அன்னகிரமாம் அருகே பட்டாம்பாக்கம் 39 ஸ்ரீ கந்தசாமி சுவாமிகள் காரணப்பட்டு . </b><br />
<b>40 ஸ்ரீ லக்ஷ்மண சுவாமிகள் புத்துப்பட்டு காலாப்பட்டு </b><br />
<b>41 குண்டலினி சித்தர் திருவக்கரை திருக்கனூர் அருகில் </b><br />
<b>இந்த 41 சித்தர்களும் ஜீவசமாதி அடைந்து அருள் ஒழி வீசி கொண்டிருக்கிறார்கள் ....... இந்த சித்தர்களின் அருள் ஆசி பெற .... தரிசிக்க வருகைதாருங்கள் உள்ளம் தெளிவடையும் ஆன்மீகச்சிந்தனையில் அடியேன்... கணேசன் பாண்டிச்சேரி </b></div>
7thsenshttp://www.blogger.com/profile/15929479294078616300noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-9124861613818987934.post-71085332083391368442016-02-20T02:08:00.001-08:002016-02-20T02:08:20.099-08:00முன்னுரை..... சித்தர்களை பற்றி....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சித்தர்கள் தமிழ் மரபின் விதிவிலக்குகள். பொது வாழ்வு முறை, வழி முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு, வழி முறைகளை உருவாக்கி சமூகத்துடன் ஒரு முரண்பாடான உறவு வைத்திருப்பவர்கள். சித் - அறிவு, சித்தை உடையவர்கள் சித்தர்கள். அறிவு படைத்தவர்கள் சித்தர்கள்.<br />
இவர்களின் மருத்துவ, கணித, இரசவாத, தத்துவ, இலக்கிய, ஆத்மீக ஈடுபாடுகள் வெளிப்பாடுகள் இவர்களின் உலகாயுத பண்பை எடுத்தியம்புகின்றன, ஆயினும் இவர்கள் வெறும் பொருளியல் வாதிகள் (materialists) அல்ல, மெய்ப்புலன் காண்பது அறிவு என்பதிற்கிணங்க, உண்மை அல்லது "நிசநிலையை" அடைய முயன்றவர்கள் சித்தர்கள்<br />
<br />
இவர்கள் இயற்கையோடு இயைந்து அதனைக் கருவியாகப் பயன்படுத்தி பல அற்புதங்களைச் செய்திருக்கிறார்கள். வெறும் சித்து விளையாட்டுகளோடு நிற்காமல், யோகம், ஞானம், வைத்தியம் போன்ற பல அரிய விஷயங்களை உலக நன்மைக்காக அருளிச் செய்த சித்தர்கள் தமிழ் மரபின் விதிவிலக்குகள். பொது வாழ்வு முறை, வழி முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு, வழி முறைகளை உருவாக்கி. சித் - அறிவு, சித்தை உடையவர்கள் சித்தர்கள்.<br />
அந்த முறைகளை, அவர்களின் இருப்பிடத்திலே அருகில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு, மனித குலத்தைக் காத்து வந்தனர். மக்கள் அனைவரும், ஒழுக்கந்தவறாமல் வாழவேண்டும் என்றும், பொய், சூது, கொலை, குடி, விபச்சாரம், கூடா ஒழுக்கம் உடல் நோயை உண்டாக்கும் என்றும், யோகப்பயிற்சியிலே வாழ்வில் வெற்றி பெறமுடியும் என்றும் உடல்வலிமையுடன் நீண்டநாள் வாழ முடியும் என்றும் சித்தர்கள் பல பாடல்கள் பாடியுள்ளனர்.<br />
<br />
சித்தர்களின் கொள்கை பரமாத்மா எங்கும் தனியாக இல்லை. நமது உடம்பு தான் பரமாத்மாவின் இடம் ஆதலால் கடவுளைத்தேடி எங்கும் அலைய வேண்டாம். உடம்பைப் பேணுவதே கடவுட்பணி, உடம்பினுள்ளேயே பரமாத்மாவைக் கண்டு மகிழ்ந்திரு என்பது சித்தர் கொள்கை.<br />
<div>
<br /></div>
</div>
7thsenshttp://www.blogger.com/profile/15929479294078616300noreply@blogger.com0